'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய முதல் படம் பீட்சா. இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் விஜய் சேதுபதி. அதற்கு முன்பே தென்மேற்கு பருவக்காற்று உள்பட சில படங்களில் நடித்திருந்தபோதும் இந்த பீட்சா படம்தான் விஜய் சேதுபதிக்கு ஹிட்டாக அமைந்தது.
அதன்பிறகு கார்த்திக் சுப்பராஜின் இறைவி படத்திலும் நடித்த விஜய் சேதுபதி, இப்போது ரஜினியை வைத்து இயக்கப்போகும் புதிய படத்திலும் நடிக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில், ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று கார்த்திக் சுப்பராஜ் சொன்னார். அதைக்கேட்டதுமே ரொம்ப சந்தோதசமாகி விட்டேன். அதனால் என்ன கதை, என்ன கேரக்டர் என்று எதுவுமே கேட்கவில்லை. காரணம் கார்த்திக் சுப்பராஜ் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. அதனால் எனது கேரக்டர் பற்றி கேட்காமல் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன்.
ரஜினியுடன் ஒரு காட்சியில் நடிக்க சான்ஸ் கிடைத்தாலும் நடிப்பேன். இந்த படத்தில் எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் கண்டிப்பாக நடிப்பேன் என்கிறார் விஜய் சேதுபதி.