ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமுத்திரகனி இயக்கிய தமிழ் படம் நிமிர்ந்து நில். இது ஜண்டா பாய் கப்பி ராஜு என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரானது. தமிழில் ஜெயம்ரவி நடித்த கேரக்டரில் தெலுங்கில் நானி நடித்தார். மற்ற கேரக்டர்கள் அப்படியே நடித்தார்கள். சரத்குமார், அமலா பால், ராகினி திரிவேதி, நாசர், சுப்பு பஞ்சு, பார்வதி நாயர் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இப்போது இந்தப் படத்தை தமிழில், வேலன் எட்டுத்திக்கும் என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். நாகன் பிக்சர்ஸ் சார்பில் கே.நாகன் வெளியிடுகிறார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழில் ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்திருந்ததைப்போல தெலுங்கில் நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இரண்டு படத்திலும் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.