ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆதி. அதன் பிறகு ஈரம், யாகாவாராயினும் நாகாக்க, வல்லினம், அரவான், மரகத நாணயம் உள்பட பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஆதியை அணுகினார்கள்.
காரணம் ஆதி தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கில் மார்க்கெட் உள்ளது. ஆதியும் நடித்தால் தெலுங்கு மார்க்கெட் மதிப்பு உயரும் என்று கணக்கு போட்டார்கள். ஆனால் ஆதி நடிக்க மறுத்து விட்டார். காரணம் அவர் தமிழில் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.
இது குறித்து ஆதி கூறியிருப்பதாவது: எனக்கு சொல்லப்பட்ட கேரக்டரில் சில மாற்றங்கள் சொன்னேன் அதை அவர்கள் ஏற்கவில்லை. இப்போது ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வருகிறேன். அவர்கள் கேட்ட தேதியை என்னால் கால்ஷீட் ஒதுக்கித்தர முடியவில்லை. நடிக்க மறுத்தேன் என்பது தவறு. சந்தர்ப்பங்கள் சரியாக அமையவில்லை. என்றார்.