ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில், நேற்று நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின்போது 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தனது இணைய பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதை தடுக்க முடியாது. தங்கள் உரிமைக்காக அமைதிப் பேரணி சென்ற மக்களை தடியடி நடத்தி, சுட்டுக்கொல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம்மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்.
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.