டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எழுமின் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு கலந்து கொண்டனர். விழாவில் சிம்பு பேசியதாவது.... என் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப போவது கிடையாது. குழந்தைகளை பள்ளிக்கு கற்று கொள்ள தான் அனுப்புகிறோம். ஆனால் அங்கு யார் முதலில் வருவான் என பார்க்கிறார்கள். அனைவரும் கற்க வேண்டும் என நினைப்பதில்லை. பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் திறமையை புரிந்து நடக்க வேண்டும்.
நடிகர் சங்க தேர்தலின் போது விஷாலின் பேச்சில் எனக்கு முரண்பாடு இருந்தது. அதனால் அவர் மீது கோபப்பட்டு திட்டியிருக்கிறேன். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவன் நான். ஆனால் அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவிற்கு என்னையும் அழைத்தார். அதற்காக நன்றி சொல்கிறேன்.
எனக்கு பிடித்தமாதிரி வாழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. படப்பிடிப்பிற்கு நான் தாமதமாக வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள். இனி அப்படி வர மாட்டேன்.
பேனர் வைக்கும் தகராறில் ரசிகர் இறந்தது வருத்தம் அளித்தது. அவரை கொலை செய்ததால் அந்த 9 பேரின் வாழ்க்கையும் வீணாகிவிட்டது. இனி யாரும் எனக்கு கட்-அவுட் வைக்க வேண்டாம்.
இவ்வாறு சிம்பு பேசினார்.