தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற இயக்குனர் பிரியதர்ஷன், சித்திக் ஆகியோர் வரிசையில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் தனது அடுத்த படத்தை ஹிந்தியில் தான் இயக்கவுள்ளார். பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி மற்றும் ரிஷி கபூர் இருவரும் இதில் இணைந்து நடிக்கின்றனர். இது ஒரு ஹாலிவுட் த்ரில்லரின் ரீமேக்காக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை வேதிகா நடிக்கிறார் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம். இதன்மூலம் பாலிவுட்டில் முதலடி எடுத்து வைக்கிறார் வேதிகா. சமீபத்தில் துவங்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு 45 நாட்கள் ஒரேகட்ட்ட படப்பிடிப்பாக நடக்க இருக்கிறது. இந்தப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் ஜீத்து ஜோசப்.