கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சீமராஜா' படபணிகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளது. அடுத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த இரண்டு படங்களையும் இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநரான ரவிகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
சயின்ஸ் பிக்ஷ்ன் படமாக உருவாக உள்ள இந்தப் படத்துக்கு 'விஞ்ஞானி' என்று பெயர் வைத்துள்ளனர்.
விஞ்ஞானி என்ற பெயரை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. என்றாலும், விஞ்ஞானி என்ற தலைப்பை ஏற்கனவே ஒருவர் பதிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. பாதி படப்பிடிப்பு முடித்துவிட்டு மீதி படப்பிடிப்பு நடத்த தயாராக உள்ளாராம் விஞ்ஞானி படத்தை தயாரித்து வருபவர்.
இந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் படத்துக்கும் விஞ்ஞானி என்று பெயர் வைத்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.