ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எழுத்தாளரும், சினிமாவில் பல படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும் பணியாற்றிய பாலகுமாரன், சில தினங்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ரஜினி, சிவகுமார், நாசர் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கமல், அரசியல் சுற்று பயணத்தில் இருந்ததால் அஞ்சலி செலுத்த வரவில்லை. இந்நிலையில் பாலகுமாரன் இல்லத்திற்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் கமல்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், சினிமாவிற்கு முன்பே பாலகுமாரனை எனக்கு தெரியும். சினிமாவிற்கு அவர் வர வேண்டும் என விரும்பியவன் நான். நவயுக சினிமாவை பற்றி நிறையே பேசியிருக்கிறோம். தமிழ் சினிமாவை எப்படி மாற்றலாம் என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அற்புதமான எழுத்தாளர், நெருப்பு போன்று எழுதுபவர். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதினோம். நன்றாக வாழ்ந்து சென்றிருக்கிறார். தமிழுக்கு அவர் கொடுத்து சென்ற பரிசுக்கு நன்றி.
இவ்வாறு கமல் கூறினார்.