தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சீரியல் தயாரிப்பிலும், ஒளிபரப்பிலும் மற்ற தொலைக்காட்சிகளை ஒப்பிடும்போது ராஜ் டி.வி பின்தங்கியே இருந்தது. ஆனால் இப்போது ராஜ் டி.வி புதிய தொடர்களை ஒளிப்புவதில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.வருகிற 28ந் தேதி முதல் 5 புதிய தொடர்களை ஒளிபரப்புகிறது. இந்த தொடர்கள் திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகிறது.
இரவு 7 மணிக்கு கடல் கடந்து உத்யோகம் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. பெற்றவர்களை இங்கு தவிக்க விட்டவிட்டு வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளை பற்றிய தொடர். 7.30 மணிக்கு கங்காதரனை காணோம் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. ஒரு ஆணை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொடர் இது. அடுத்து 8 மணிக்கு கண்ணம்மா என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.
இது வாழ்க்கையில் போராடி ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை. 8.30 மணிக்கு ஹலோ சியாமளா என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. ஒரு இளம்பெண் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றிய தொடர். 9 மணிக்கு நலம் நலமறிய ஆவல் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. குடும்பங்களில் நடக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளை கொண்ட தொடர்.