பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
இந்தியத் திரையுலகில் வரவேற்பிலும், வசூலிலும் பெரிய சாதனை படைத்த படம் பாகுபலி. இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி இந்திய மக்களை மட்டுமல்லாது உலக அளவிலும் உள்ளவர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக ஜப்பான் நாட்டு மக்கள் இந்திய மக்களை விட பாகுபலி படத்தைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.
அந்தப் படங்களின் கதாபாத்திரங்களை மையமாக வைத்து பலவிதமான பொருட்களைத் தயாரிப்பது, படங்கள் வரைவது என அந்தப் படத்தை வேறுவிதமாக ரசித்தார்கள். படத்தின் தயாரிப்பாளர் ஷோபு, இயக்குனர் ராஜமௌலி ஜப்பான் நாட்டிற்கும் சென்று அங்கு பாகுபலி 2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இப்போது ஜப்பான் நாட்டில் பாகுபலி படத்தின் கதாபாத்திரங்களை வைத்து காமிக்ஸ் புத்தகத்தை உருவாக்கப் போகிறார்களாம். அது பற்றி கருத்து தெரிவித்த ராஜமௌலி, “என்னுடைய சிறிய வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இப்போது நான் எடுக்கும் படங்களுக்கம் அது ஒரு உத்வேகமாக இருக்கிறது. ஜப்பான் நாட்டில் பாகுபலி காமிக்ஸ் புத்தக வடிவில் வர இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்க்கை முழுமையாகி இருப்பதாக நான் கருதுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டு மக்கள் தனக்கு அளித்த பரிசுப் பொருட்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகவும், அற்புதமானகவும் உள்ளதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார்.