பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சமீபத்தில் தெலுங்கில் 'மகாநதி' மற்றும் தமிழில் 'நடிகையர் திலகம் என மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி இருந்தது. இதில் ஆச்சர்யப்படும் விதமாக மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் கதாபாத்திரம் கொஞ்சம் வில்லத்தன்மை சாயலுடன் உருவாக்கப்பட்டு இருந்தது. தற்போது ஜெமினியின் மகள் கமலா செல்வராஜ், 'மகாநதி' படத்தில் என் தந்தையை தவறாக சித்தரித்துள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் எனது தந்தை ஜெமினியும் சேர்ந்தே மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டனர். ஆனால் எனது தந்தையை பட வாய்ப்பே இல்லாத நடிகர் போல காட்டியுள்ளார்கள். மேலும் சாவித்திரிக்கு குடிக்கும் பழக்கத்தை தூண்டிவிட்டதே என் தந்தை தான் என காட்டியுள்ளார்கள். இதில் துளியும் உண்மை இல்லை.
சாவித்திரி சிவாஜியை வைத்து தமிழில் 'பிராப்தம்' படத்தை தயாரிக்க முடிவு செய்த போது, அது வேண்டாம் என கூறி அவரது மனதை மாற்ற எனது தந்தை ஜெமினி கணேசன் அவரை தேடிச்சென்றார்.. ஆனால் அவரை உள்ளே நுழையவிடாமல் காவலாளியையும் நாயையும் விட்டு துரத்தினார் சாவித்திரி. அதனாலேயே அதன்பின்னர் என் தந்தை, சாவித்ரியை பார்க்க செல்வதை நிறுத்திவிட்டார்” என கோபமாக கூறியுள்ளார் கமலா செல்வராஜ்.