பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள நடிகர் ஜெயசூர்யாவின் மனைவி சரிதா. இவர், தனது கணவர் நடிக்கும் படங்களில் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்ல ஆடை வடிவமைப்பு ஸ்டுடியோ ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.
கடந்த ஆண்டு 'ஜெயசூர்யா நடித்த 'ஆடு-2' படத்தில் இரண்டு பக்கமும் பயன்படுத்தும் வடிவிலான கருப்பு - சிவப்பு வேட்டியை ஜெயசூர்யவுக்காக உருவாக்கினார் சரிதா. அந்த வேட்டி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது.
தற்போது, 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் திருங்கையாக நடித்துள்ள ஜெயசூர்யா, பெரும்பாலான காட்சிகளில் சேலைகட்டித்தான் நடித்துள்ளாராம். இதிலும் அவரது மனைவி சரிதா தான் படம் முழுக்க இவருக்கு சேலை கட்டிவிட்டுள்ளாராம்.
இதில் புத்திசாலித்தனமாக தனது கணவர் சேலை அணிந்து காட்சியளிக்கும் புகைப்படங்களை விளம்பர ஹோர்டிங்குகளாக மாற்றி, நகரத்தின் முக்கிய பகுதிகளில் வைத்து தனது புடவை கலெக்சனுக்கு விளம்பரம் தேடி வருகிறார் சரிதா.