தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரகாஷ்ராஜின் தோழியும், பத்திரிகையாளரும் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு பா.ஜ., மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் பிரகாஷ் ராஜ். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் எல்லாவற்றையும் மீறி பா.ஜ., பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ் ராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது, கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான என்கவுன்ட்டர் தொடங்கி விட்டது. யார் எங்கு தாவினார்கள், எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் போன்ற செய்திகள் எல்லாம் வர தொடங்கும். அரசியல் சாணக்கியங்களை கண்டு மகிழுங்கள்.
அரசியல்வாதிகளின் விளையாட்டின் நமது இறுதி தீர்ப்பு அரசியலுக்காக எப்படி மாற்றப்படுகிறது. நம் நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றை எல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுபோவாம் என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.