எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து, இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்வதில்லை.
தம்பி ராமைய்யாவின் மகன் நடித்த அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் ஆடியோ விழாவில் கலந்த கொண்டபோது, சின்ன தளபதி சிவகார்த்திகேயன் என்று அவரை குறிப்பிட்டபோது, அப்படியெல்லாம் சொல்லாதீங்க நான் ரொம்ப சாதாரணமான நடிகன். எனக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்று சொன்னார்.
அதையடுத்து நேற்று சென்னையில் ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், ரஜினி, கமல் விஜய், அஜித் இவங்கதான் ஹீரோ. நானெல்லாம் ஹீரோவே கிடையாது. லீடு கேரக்டர்ல நடிக்கிற ஒரு நடிகன் அவ்வளவுதான் என்று தன்னை தாழ்த்திக் கொண்டு பேசினார்.
மேலும், ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள்.. அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு போக வேண்டும். நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம் என்றார்.