டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், கன்னியாகுமரியில் இன்று சுற்றுபயணம் மேற்கொண்டார். அங்குள்ள காந்தி மண்டபத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய கமல், மக்களிடம் பேசியதாவது...
கன்னியாகுமரிக்கு வந்திருப்பது மக்களை காண மக்களுடன் பேசி அவர்கள் எண்ணம் என்ன என்பதை அறியவே. தமிழகம் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. உங்களுடன் நான் செலவழிக்கும் குறைவான நேரம் எனக்கு நிறைவான பாடமாக இருக்கிறது. சிறிய இடங்கள் ஆனால் பெரிய மனங்களை இங்கு பார்க்கிறேன்.
கேள்வித்தாள்களை தவறாக கொடுத்தாலும் சரியாக எழுதி தேர்ச்சி பெறுபவர்கள் தமிழக மாணவர்கள். எத்தனை தடைகள் வந்தாலும் இன்று தேர்வில் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாளை அவர்களுக்கும் புதிய பயணம் தொடங்க இருக்கிறது. கல்வியும் சுகாதாரமும் தமிழகத்திற்கு மிக முக்கியம்.
அரசியல் இப்பொழுது எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் நாளை நமதாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பயணம். ஒவ்வொரு இடத்தில் என் மேல் உங்களுக்கு உள்ள அன்பு எனக்கு புரிகிறது அதுவே எனக்கு எனது நம்பிக்கையாக மாறுகிறது
தமிழகத்தின் தாக்கமாகவும் தேக்கமாகவும் எது இருக்கிறது என்பதை அறிவது தான் நமது வேலை. இப்பொழுது நான் மக்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன்.
இவ்வாறு கமல் பேசினார்.