‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், கன்னியாகுமரியில் இன்று சுற்றுபயணம் மேற்கொண்டார். அங்குள்ள காந்தி மண்டபத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய கமல், மக்களிடம் பேசியதாவது...
கன்னியாகுமரிக்கு வந்திருப்பது மக்களை காண மக்களுடன் பேசி அவர்கள் எண்ணம் என்ன என்பதை அறியவே. தமிழகம் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. உங்களுடன் நான் செலவழிக்கும் குறைவான நேரம் எனக்கு நிறைவான பாடமாக இருக்கிறது. சிறிய இடங்கள் ஆனால் பெரிய மனங்களை இங்கு பார்க்கிறேன்.
கேள்வித்தாள்களை தவறாக கொடுத்தாலும் சரியாக எழுதி தேர்ச்சி பெறுபவர்கள் தமிழக மாணவர்கள். எத்தனை தடைகள் வந்தாலும் இன்று தேர்வில் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாளை அவர்களுக்கும் புதிய பயணம் தொடங்க இருக்கிறது. கல்வியும் சுகாதாரமும் தமிழகத்திற்கு மிக முக்கியம்.
அரசியல் இப்பொழுது எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் நாளை நமதாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பயணம். ஒவ்வொரு இடத்தில் என் மேல் உங்களுக்கு உள்ள அன்பு எனக்கு புரிகிறது அதுவே எனக்கு எனது நம்பிக்கையாக மாறுகிறது
தமிழகத்தின் தாக்கமாகவும் தேக்கமாகவும் எது இருக்கிறது என்பதை அறிவது தான் நமது வேலை. இப்பொழுது நான் மக்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன்.
இவ்வாறு கமல் பேசினார்.