ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் 37வது படத்தையும் இயக்குகிறார் கே.வி.ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் புருவ அழகி பிரியா வாரியர் நாயகியாக நடிப்பதாக செய்தி வெளியானது. ஆனால் கே.வி.ஆனந்த் மறுத்தார். அதோடு முன்னணி நடிகைகளிடம் கால்சீட் பேசி வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது வனமகன் படத்தை அடுத்து ஆர்யாவுடன் கஜினிகாந்த், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதியுடன் ஜூங்கா ஆகிய படங்களில் நடித்துள்ள, சாயிஷா சாய்கல் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.