சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ், 8 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் செம போத ஆகாதே. அதர்வா தயாரித்து, நடித்திருக்கிறார். அவருடன் மிஸ்தி, அனைகா, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் இசை அமைத்திருக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் வருகிற 18ந் தேதி வெளிவருகிறது. படம் பற்றி பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது:
படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. செம போதையில் ஹீரோ செய்யும் ஒரு சின்ன தவறு அவரது வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதை காமெடியாக சொல்லுகிற படம்.
போதையில் தான் தவறான முடிவெடுப்பார்கள். அந்த முடிவுகள் எத்தகைய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை சொல்லுகிறோம். சின்ன சபலம் மொத்த வாழ்க்கையையும் திருப்பி போட்டுவிடும். ஐ.டி இளைஞர்கள் வாழ்க்கை பின்னணியில் செல்லும் கதை. ஆக்ஷ்ன், காமெடி, காதல், செண்டிமெண்ட் எல்லாம் கலந்த ஜாலியான படம், சின்ன மெசேஜும் இருக்கும். என்கிறார் பத்ரி வெங்கடேஷ்.