ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த இரும்புத்திரை படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. படத்தில் ஆதார் கார்டு, ஏடிஎம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி விமர்சிக்கப்படுகிறது. இது சில அரசியல் கட்சியினருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மிரட்டல் விடுத்து வருவதாக தெரிகிறது. விஷால் வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கும் மிரட்டல்கள் வருவதால் பல தியேட்டர்களில் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இரும்புத்திரை திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் நேற்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: இரும்புத்திரை படத்தில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் இருக்கிறது. ஆனால் ஆதார் திட்டத்துக்கு எதிராக உள்ளது என்று கூறி சில அமைப்புகள் மிரட்டி வருகிறது. படம் ஓடும் தியேட்டர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார்கள். எனவே படம் ஓடும் தியேட்டர்களுக்கு தக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.