வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு 'நடிகையர் திலகம்' என்கிற பெயரில் தமிழில் நேற்று வெளியானது.. சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.. இந்தப்படத்திற்கு சிரஞ்சீவி, மோகன்லால், ராஜமவுலி உள்ளிட்ட பல பிரபலங்களிடம் இருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
குறிப்பாக சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் அந்த கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்க்கும்படியாக நடித்துள்ளார் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.. இந்தநிலையில் நடிகர் கமலை சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷை மற்றவர்கள் பாராட்டியதைவிட விட கமல் பாராட்டியது ரொம்பவே முக்கியத்துவம் பெறுகிறது..
காரணம், 1960-களில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' படத்திலேயே சாவித்திரியின் மகனாக நடித்தவர் தான் கமல். அதனாலேயே சாவித்திரி, ஜெமினி இருவர் மீதும் தீராத அன்பு கொண்டவர். மேலும் பார்த்தால் பசிதீரும், பாதகாணிக்கை ஆகிய படங்களிலும் சாவித்திரியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.