மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் |
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு 'நடிகையர் திலகம்' என்கிற பெயரில் தமிழில் நேற்று வெளியானது.. சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.. இந்தப்படத்திற்கு சிரஞ்சீவி, மோகன்லால், ராஜமவுலி உள்ளிட்ட பல பிரபலங்களிடம் இருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
குறிப்பாக சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் அந்த கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்க்கும்படியாக நடித்துள்ளார் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.. இந்தநிலையில் நடிகர் கமலை சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷை மற்றவர்கள் பாராட்டியதைவிட விட கமல் பாராட்டியது ரொம்பவே முக்கியத்துவம் பெறுகிறது..
காரணம், 1960-களில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' படத்திலேயே சாவித்திரியின் மகனாக நடித்தவர் தான் கமல். அதனாலேயே சாவித்திரி, ஜெமினி இருவர் மீதும் தீராத அன்பு கொண்டவர். மேலும் பார்த்தால் பசிதீரும், பாதகாணிக்கை ஆகிய படங்களிலும் சாவித்திரியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.