ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
'ஹரஹரமகாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கௌதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, சாரா, கருணாகரன் முதலானோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை 'ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. இளைஞர்களை குறிவைத்து ஆபாசமான காட்சிகள், ஆபாசமான வசனங்கள் என்று எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும், இன்னொரு பக்கம் மிகப்பெரும் வசூல் கிடைத்துள்ளது.
22 நாட்களில், 3.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை 5.25 கோடிக்கு ஒரு விநியோகஸ்தர் வாங்கினார். சில நாட்களிலேயே அந்த விநியோகஸ்தர் அதை 7 கோடிக்கு பிரித்து விற்றார். 7 கோடிக்கு வாங்கியவர்களுக்கு பெரிய லாபம் கிடைத்துள்ளது. முதல் 2 நாளில் 5 கோடியையும், 3 நாளில் 7 கோடியையும் வசூலித்துள்ளது இந்தப்படம்.
அதே நேரம் ஆபாசப்படம் என்பதால் தமிழ்நாடு தவிர வேறு எங்கும் இதுவரை வெளியாகவில்லை. மலேஷியா, துபாய் போன்ற பல நாடுகளில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தடை செய்துவிட்டனர். ஆனாலும் வெறும் தமிழ்நாடு தியேட்டரில் ரைட்ஸை விற்றவகையிலேயே தயாரிப்பாளருக்கு 1.5 கோடி லாபம் கிடைத்துவிட்டது.