'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ., மைதானத்தில் நடந்தது.
இதில் பேசிய இயக்குநர் ரஞ்சித், மீண்டும் இப்படி ஒரு மேடை அமைத்து தந்த ரஜினிக்கு நன்றி. இது மக்களின் சினிமா, மக்களுக்கான சினிமா, மக்களின் ஒருவருக்கான சினிமா
ரஜினியை சூப்பர் ஸ்டாராக அனைவரும் பார்த்திருப்போம். அதையும் தாண்டி அவரின் எளிமை, அவருக்குள் இருக்கும் மிகப்பெரிய பவரை வெளிக்கொண்டு வர வேண்டும் என எண்ணினேன். காலாவில் ரஜினியின் பவரை பார்க்கலாம்.
காலா ஒரு கமர்ஷியல் படம் தான். அதில் மக்களின் பிரச்னைகளை பேச வேண்டும் என ஆசைப்பட்டேன். ரஜினியின் வழக்கமான படமாக காலா இருக்காது. மனித மாண்பை மீட்டெடுக்கும் படமாக இருக்கும்.
நம் வாழ்க்கையில் நிகழும் முக்கியமான பிரச்னையை இந்தப்படம் பேசும். நம் நாட்டில் 60 சதவீதம் மக்கள் நிலம் இல்லாமல் உள்ளார்கள். அது ஏன்?, அதற்கான காரணம் என்ன என்பதை காலாவில் பார்க்கலாம்.
இவ்வாறு ரஞ்சித் பேசினார்.