ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ., மைதானத்தில் நடந்தது.
இதில் பேசிய இயக்குநர் ரஞ்சித், மீண்டும் இப்படி ஒரு மேடை அமைத்து தந்த ரஜினிக்கு நன்றி. இது மக்களின் சினிமா, மக்களுக்கான சினிமா, மக்களின் ஒருவருக்கான சினிமா
ரஜினியை சூப்பர் ஸ்டாராக அனைவரும் பார்த்திருப்போம். அதையும் தாண்டி அவரின் எளிமை, அவருக்குள் இருக்கும் மிகப்பெரிய பவரை வெளிக்கொண்டு வர வேண்டும் என எண்ணினேன். காலாவில் ரஜினியின் பவரை பார்க்கலாம்.
காலா ஒரு கமர்ஷியல் படம் தான். அதில் மக்களின் பிரச்னைகளை பேச வேண்டும் என ஆசைப்பட்டேன். ரஜினியின் வழக்கமான படமாக காலா இருக்காது. மனித மாண்பை மீட்டெடுக்கும் படமாக இருக்கும்.
நம் வாழ்க்கையில் நிகழும் முக்கியமான பிரச்னையை இந்தப்படம் பேசும். நம் நாட்டில் 60 சதவீதம் மக்கள் நிலம் இல்லாமல் உள்ளார்கள். அது ஏன்?, அதற்கான காரணம் என்ன என்பதை காலாவில் பார்க்கலாம்.
இவ்வாறு ரஞ்சித் பேசினார்.