பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ., மைதானத்தில் நடந்தது.
இதில் பேசிய இயக்குநர் ரஞ்சித், மீண்டும் இப்படி ஒரு மேடை அமைத்து தந்த ரஜினிக்கு நன்றி. இது மக்களின் சினிமா, மக்களுக்கான சினிமா, மக்களின் ஒருவருக்கான சினிமா
ரஜினியை சூப்பர் ஸ்டாராக அனைவரும் பார்த்திருப்போம். அதையும் தாண்டி அவரின் எளிமை, அவருக்குள் இருக்கும் மிகப்பெரிய பவரை வெளிக்கொண்டு வர வேண்டும் என எண்ணினேன். காலாவில் ரஜினியின் பவரை பார்க்கலாம்.
காலா ஒரு கமர்ஷியல் படம் தான். அதில் மக்களின் பிரச்னைகளை பேச வேண்டும் என ஆசைப்பட்டேன். ரஜினியின் வழக்கமான படமாக காலா இருக்காது. மனித மாண்பை மீட்டெடுக்கும் படமாக இருக்கும்.
நம் வாழ்க்கையில் நிகழும் முக்கியமான பிரச்னையை இந்தப்படம் பேசும். நம் நாட்டில் 60 சதவீதம் மக்கள் நிலம் இல்லாமல் உள்ளார்கள். அது ஏன்?, அதற்கான காரணம் என்ன என்பதை காலாவில் பார்க்கலாம்.
இவ்வாறு ரஞ்சித் பேசினார்.