தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ., மைதானத்தில் நடந்தது.
இதில் பேசிய இயக்குநர் ரஞ்சித், மீண்டும் இப்படி ஒரு மேடை அமைத்து தந்த ரஜினிக்கு நன்றி. இது மக்களின் சினிமா, மக்களுக்கான சினிமா, மக்களின் ஒருவருக்கான சினிமா
ரஜினியை சூப்பர் ஸ்டாராக அனைவரும் பார்த்திருப்போம். அதையும் தாண்டி அவரின் எளிமை, அவருக்குள் இருக்கும் மிகப்பெரிய பவரை வெளிக்கொண்டு வர வேண்டும் என எண்ணினேன். காலாவில் ரஜினியின் பவரை பார்க்கலாம்.
காலா ஒரு கமர்ஷியல் படம் தான். அதில் மக்களின் பிரச்னைகளை பேச வேண்டும் என ஆசைப்பட்டேன். ரஜினியின் வழக்கமான படமாக காலா இருக்காது. மனித மாண்பை மீட்டெடுக்கும் படமாக இருக்கும்.
நம் வாழ்க்கையில் நிகழும் முக்கியமான பிரச்னையை இந்தப்படம் பேசும். நம் நாட்டில் 60 சதவீதம் மக்கள் நிலம் இல்லாமல் உள்ளார்கள். அது ஏன்?, அதற்கான காரணம் என்ன என்பதை காலாவில் பார்க்கலாம்.
இவ்வாறு ரஞ்சித் பேசினார்.