ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி நடித்துள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. சமீபத்தில் வெளிவந்த இந்தப் படம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் படத்தில் தங்களை பற்றி தவறாக சித்தரிப்பதாக கூறி திருநங்கைகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை தோஸ்த் என்ற அமைப்பைச் சேர்ந்த திருநங்கைகள் சாரா, எழுத்தளார் அப்சரா, ஆகியோர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இருட்டு அறையில் முரட்டுகுத்து என்ற படத்தின் பெயரே ஆபாசமாக உள்ளது. அந்தப் படத்தில் திருநங்கைகளை ஆபாசமாக சித்தரித்தும், இழிவுபடுத்தியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த காட்சிகளை அகற்ற வேண்டும். படத்தை தடை செய்ய வேண்டும். படத்தில் நடித்தவர்கள், இயக்கியவர், தயாரித்தவர் ஆகியோர் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.
எங்கள் புகார் மனுவை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளோம். தணிக்கை குழுவில் திருநங்கைகளை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் அப்போது தான் இதுபோன்ற காட்சிகள் வராமல் தடுக்க முடியும். என்றனர்.