'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் நடிகர் சங்கத்துக்கென்று 1986-ம் ஆண்டு 26 செண்ட் நிலம் வாங்கப்பட்டது. இந்த நிலத்தை நடிகர் சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு ஒப்புதல் இன்றி 1996ம் ஆண்டு ராதாரவி இரண்டு பேருக்கு விற்பனை செய்துள்ளார். இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என்று புதிதாக பொறுப்பேற்ற நாசர் தலைமையிலான நிர்வாகத்தினர் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகள், காஞ்சிபுரம் போலீஸ் ஐஜி மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகாருக்கு முகாந்திரம் இருந்தால் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் போலீசார் நடிகர் சங்கதிடம் புகாருக்கான ஆதாரங்களை கேட்டது.
இதனால் நடிகர் சங்கத் தலைவர் நாசர், நேற்று காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசாரை சந்தித்து ராதாரவியின் மோசடிக்கு எதிரான ஆவணங்களை சமர்ப்பித்தார். போலீசர் நாசரிடம் 2 மணி நேரம் விசாரித்தனர். போலீசாரின் கேள்விகளுக்கு நாசர் ஆதாரத்துடன் பதில் அளித்துள்ளார். விரைவில் ராதாரவி மீது மோசடி வழக்கு தொடரப்படலாம் என்று தெரிகிறது.