தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறவர் ஸ்ரீதேவி. இவரது வில்லத்தனத்துக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீதேவி, தனது மாநிலத்தைச் சேர்ந்த போட்டோகிராபரை சத்தமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
அவர் பெயர் அசோக் சிந்தாலா. பெங்களூரில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறார். என்றாலும் செல்லப் பிராணிகளை படம்பிடிப்பதில் நிபுணர். இவரைப் பற்றி பேஸ்புக்கில் அறிந்து கொண்ட ஸ்ரீதேவி, தனது வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளை படம் எடுக்க அழைத்துள்ளார். அவரும் வந்துள்ளார். இந்த சந்திப்பு காதலாக மலர சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆந்திர பாரம்பரியப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஸ்ரீதேவி.