ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சில தினங்களுக்கு முன் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தேசிய விருது விழாவில் கலந்துகொள்ள டில்லி சென்றபோது அவருடன் அவரது அனுமதி இல்லாமலேயே செல்பி எடுத்தார் ஒரு இளைஞர். உடனே அந்த இளைஞரின் செல்போனை வாங்கிய யேசுதாஸ் அதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அழித்துவிட்டு திருப்பிக் கொடுத்தார். அப்படி கொடுக்கும்போது 'செல்பி எடுப்பது செல்பிஷ்' என்கிற வாக்கியத்தையும் அவர் சொல்ல தவறவில்லை..
யேசுதாஸின் இந்த செயல் குறித்து சோஷியல் மீடியாக்களில் பலரும் எதிர்மறை விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இளைஞர் ஒருவர் யேசுதாஸ் செல்பி எடுப்பதை ஏன் எதிர்க்கிறார் என அவருடனான தனது அனுபவத்தின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது மனிதர்கள் எப்போதும் இன்னொருவரின் உதவியின்றி வாழ நினைக்க கூடாது என்பது யேசுதாஸின் எண்ணம்... செல்பி எடுக்கும்போது கூட இன்னொரு நபர் உதவியில்லாமல் எடுக்க முயற்சிக்கிறோமே தவிர இன்னொருவரை அழைத்து புகைப்படம் எடுத்து தரச்சொல்லும் பழக்கம் குறைந்து வருகிறது.. அதை யேசுதாஸ் விரும்புவதில்லை.. அதேசமயம் இன்னொரு நபர் உதவியுடன் புகைப்படம் எடுக்கும்போது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் புன்னகையுடன் போஸ் கொடுக்க அவர் தயங்குவதே இல்லையாம்.
இப்படி தன்னுடன் அனுமதி கேட்டு செல்பி எடுக்க விரும்பிய அந்த நபரிடம் இவ்வளவு விளக்கம் கூறிய யேசுதாஸ் அந்த வழியாக சென்ற ஒரு நபரை அழைத்து செல்போனை கொடுத்து போட்டோ எடுக்க சொன்னாராம். ஆகவே ஒரு கொள்கையுடன் தான் செல்பி என்கிற விஷயத்தை எதிர்க்கிறார் யேசுதாஸ்.