நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஏமாலி, நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களில் நடித்தவர் அதுல்யா ரவி. தற்போது நாடோடிகள்-2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள்-2 படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடிக்கிறார் அதுல்யா ரவி. ஆனால் தங்கை வேடம் என்றாலும், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடமாம்.
இதுபற்றி அதுல்யா ரவி கூறுகையில், முகவரி துரை இயக்கிய ஏமாலி படத்தில் நான் நாயகியாக நடித்தேன். அந்த படத்தில் முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடித்தார். அப்போது எனது நடிப்பைப் பார்த்து தான், நாடோடிகள்-2 படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார்.
இந்த படத்தில் தங்கை வேடம் என்றதும் பயந்தேன். ஆனால் கதையை கேட்ட பிறகுதான் அந்த வேடம் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிந்து கொண்டேன். அதனால் நாடோடிகள்-2 படம் எனக்கு திருப்புமுனை படமாக அமையும் என்கிற நம்பிக்கையில் நடித்து வருகிறேன் என்கிறார் அதுல்யாரவி.