மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
கோவில்பட்டி வீரலட்சுமி, பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த அக்ஷ்யா, கலாபக் காதலன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு உளியின் ஓசை, எங்கள் ஆசான், கஜா, உயர்திரு 420, உள்ளிட்ட படங்களில் நடித்தார். நண்பர்களுடன் இணைந்து இசை ஆல்பங்களையும் வெளியிட்டார்.
தற்போது அக்ஷ்யா, யாளி என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் அக்ஷ்யா ஹீரோயினாக நடித்துள்ளார். தமன், ஊர்வசி, மனோபாலா, அர்ஜுன் நடித்துள்ளனர். இந்த படத்தை முதலில் நடன இயக்குனர் ஒருவர் இயக்கினார். அவர் சொதப்பியதால் தானே இயக்குனர் ஆகிவிட்டார் அக்ஷ்யா. காரணம் அக்ஷ்யா தான் படத்தின் தயாரிப்பாளர்.
இதுகுறித்து அக்ஷ்யா கூறியதாவது : இயக்குனராகும் ஆசை எனக்கு இருந்ததில்லை. ஆனால் திடீரென இயக்குனராகும் சூழ்நிலை வந்தது. செய்து பார்ப்போமே என்று களத்தில் இறங்கிவிட்டேன். இப்போது படத்தை பார்த்தவர்கள் நல்ல தேர்ந்த இயக்குனர் போல இயக்கிய இருப்பதாக சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது. இது ரொமான்ஸ் த்ரில்லர் படம்.
மும்பை பின்னணியில் நடக்கும் கதை. ஒரு கொலை தொடர்பு சம்பவத்திற்கும், படத்தின் முக்கிய கேரக்டர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை பற்றிய படம். மும்பை, சென்னை, மலேசியாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.