தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு நான்கைந்து நல்ல படங்களாவது வந்து கொண்டிருக்கிறது என்ற பெருமையை குலைக்க சில இயக்குனர்கள் முன் வந்திருப்பது தமிழ் சினிமாவுக்கு போதாத காலம். இதுநாள் வரையில் சில மலையாளப் படங்களை 'காலை காட்சி' படங்கள் என கேவலமாகப் பேசிக் கொண்டிருந்த காலம் இனி ஏற்படப் போவதில்லை. அங்கு அப்படிப்பட்ட படங்கள் வருவது முற்றிலுமாக நின்று விட்டது. அப்படி நடித்து வந்த நடிகைகளை மலையாள சினிமாவை விட்டே விரட்டிவிட்டார்கள்.
அது போல 'இருட்டு அறையில் முரட்டு குத்து' போன்ற படங்களை தமிழ் சினிமாவை விட்டே விரட்ட வேண்டும். இல்லை என்றால் இனி வரும் காலங்களில் இது போன்ற படங்களை மட்டுமே எடுக்க இன்றைய பல இளம் இயக்குனர்கள் தயாராகி விடுவார்கள்.
சமூக வலைத்தளங்களில் இந்தப் படங்களைப் பற்றி பலரும் ஒரு பக்கம் திட்டிக் கொண்டிருக்க, மறுபக்கம் அதே சமூக வலைத்தளங்களில் இந்தப் படம் அதிக வசூலைப் பெற்று வருகிறது என படம் சம்பந்தப்பட்டவர்கள் பரப்பி வருகிறார்கள்.
டிரென்டை மாற்றுவதற்கு சமூக வலைத்தளங்களை பலரும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது, சினிமாவிலும் நுழைந்துவிட்டது நல்ல சினிமா வருவதையும், நல்ல சினிமாவை மட்டுமே ரசிகர்கள் பார்ப்பதையும் தடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் தரத்தை படுபாதாளத்தில் கீழிறிக்கிய 'இருட்டு அறையில் முரட்டு குத்து' போன்ற படங்களுக்கு யார் ஓங்கி பதிலடி கொடுப்பது?. அது ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.