பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை த்ரிஷாவுக்கு மே 4-ந் தேதியான நேற்று 35வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு ஏராளமான ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதில் ஆர்யாவும் குறிப்பிடத்தக்கவர்.
இவர் எப்போதுமே த்ரிஷாவை குஞ்சுமணி என்று தான் கலாய்ப்பார். இந்நிலையில், த்ரிஷாவின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைடியர் குஞ்சுமணி த்ரிஷா. இந்த வருடம் உங்கள் நடிப்பில் வெளியாகும் படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு, த்ரிஷா பதிலுக்கு நன்றி மை டியர் ஜாம் என தெரிவித்திருக்கிறார். இதைப்பார்த்த நெட்டீசன்களில் ஒருவர், "நீங்க இரண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணக்கூடாது" என கேட்க, ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷாவிடம், "கல்யாணம் தான் கட்டிக்கிட்டி ஓடிப்போலமா.... இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா..." என கலாய்த்துள்ளார்.