ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர்களான விஜய், சூர்யா, கார்த்தி, தெலுங்கு சினிமாவின் வாரிசு நடி கர்களான மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர், ராணா, அல்லு அர்ஜூன் என பல வாரிசு நடிகர்களுடன் நத்தவர் காஜல்அகர்வால்.
இந்நிலையில், சினிமா உலகில் பிரபலங்களின் வாரிசுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுவது குறித்து அவரிடம் ஒரு கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு காஜல்அகர்வால் கூறுகையில்,
சினிமாவில் வாரிசு நடிகர்கள் என்பதற்காக முக்கியத் துவம் கொடுக்கப்படவில்லை. என்னதான் முக்கியத்துவம் கொடுத்தாலும் அவர்களிடம் திறமையும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும்.
மேலும், நாம் வெற்றி பெற்ற வாரிசு நடிகர்களைப்பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் எத்தனையோ வாரிசுகள் ஓரிரு படங்களோடு காணாமல் போயிருக்கிறார்கள். அது மட்டுமின்றி மற்றவர்களை விட வாரிசு நடிகர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதனால் அவர்கள் கூடுதலாக மெனக்கெட வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது என்கிறார் காஜல்அகர்வால்.