தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உலக சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுகிறவர் ஜாக்கிசான். உலகம் முழுவதும் கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்டவர். அவரது மகள் எட்டாநங் தெருவில் வாழ்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி ஹாலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜாக்கிசானின் மகள் ஏன் தெருவில் வசிக்க வேண்டும் என்ற கேள்வி எழும். அதற்கு காரணம் எட்டாநங் ஒரு ஓரின சேர்க்கையாளர் (லெஸ்பியன்). அவரது தோழி ஆண்டி ஆன்டுடன் அவர் வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு வாழ்க்கை பிடிக்காமல் ஜாக்கிசான் அவரை விலக்கி வைத்திருப்பதாவும், அதனால் வாழ வசதியில்லாமல் பாலத்தின் அடியில் சாலையில் வாழ்ந்து வருவதாகவும் எட்டாநங் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
எனக்கும், என் தோழிக்கும் இருப்பது புனிதமான அன்பு, உறவு. அதனை என் பெற்றோர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்களிடம் நான் பலமுறை உதவி கேட்டும் மறுத்துவிட்டார்கள். நாங்கள் ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பது தவறா? எங்களை ஏன் பிரிக்க பார்க்கிறார்கள். தயவு செய்து எங்களையும் எங்கள் அன்பையும் புரிந்து கொள்ளுங்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து பதில் அளித்துள்ள ஜாக்கிசான், "என் மகள் விஷயத்தில் ஒரு தந்தையாக நான் தோற்றுவிட்டேன். இந்த விஷயத்தை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
ஜாக்கி சானின் மனைவி கூறுகையில், பணமில்லை என்றால் ஏதாவது வேலை தேடி, உழைத்து தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.