பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் டி.வி திரைப்பட தரத்துக்கு தொடர்களை தயாரித்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, வந்தாள் ஸ்ரீதேவி தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
பொதுவான சின்னத்திரை சீரியல் நடிகைகள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வந்தாள் ஸ்ரீதேவி தொடரின் நாயகி அனன்யா சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்திருக்கிறார். ஹீரோயின்களை இயற்கையான சூழுலில் ஆடவிட்டு படம்பிடிக்க சினிமா உலகம் மசினகுடிக்கு செல்லும், அந்த மசினகுடியில் இருந்து வந்திருக்கிறார் ஸ்ரீதேவி. அப்பா ஊட்டியில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றுகிறார்.
சென்னையில் படித்தவருக்கு அப்படியே மீடியாக்கள் பக்கம் கவனம் திரும்ப பல சினிமா ஆடிசன்களில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு சாருஹாசன் தாதாவாக நடிக்கும் தா தா 87 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் வந்தாள் ஸ்ரீதேவி ஆடிசனில் கலந்து கொண்டு அதிலும் தேர்வாகி இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். தா தா 87 படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் சினிமா நடிகையாக புகழ்பெற வேண்டும் என்பதே அனன்யாவின் ஆசை.