இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இங்கிலாந்து இளவரசர் ஹரி மாடல் அழகி மெர்க்கரை தீவிரமாக காதலித்து வந்தார். தற்போது இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது. வருகிற மே 19ந் தேதி நடக்கும் திருமணத்தில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொள்கிறார். உலகம் முழுவதிலிமிருந்தும் அழைக்கப்பட்ட 600 விருந்தினர்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். காரணம் மணப்பெண் மெர்க்கலும், பிரியங்கா சோப்ராவும் நெருங்கிய தோழிகள்.
இதற்கிடையில் பிரியங்கா சோப்ரா மணப்பெண்ணின் தோழியா இருப்பார் என்ற செய்திகள் நேற்று வெளிவந்தது. இதனை பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளார். "மெர்கல் எனக்கு நெருக்கமான தோழி, அவர் திருமண பந்தத்தில் இணைய போவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு அவரது வாழ்க்கை முற்றிலும் மாற இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். மணப்பெண் தோழியாக நான் இருப்பேன் என்ற தகவல் தவறானது. ஒரு தோழியாக திருமணத்தில் கலந்து கொள்கிறேன்" என்கிறார் பிரியங்கா சோப்ரா.