ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெண்கள் எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வரும் வேளையில் சினிமா நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த தொல்லைகள் குறித்து அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். ராதிகா ஆப்தே, ஸ்ரீரெட்டி உள்ளிட்ட நடிகைகளை தொடர்ந்து, நடிகை ரெஜினாவும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சென்னையில் ஒருமுறை நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு இளைஞர் தனது உதட்டை பிடித்து இழுத்தார். அதையடுத்து அந்த இளைஞரை தான் கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக கூறியுள்ள ரெஜினா, இதுபோன்று இரண்டு மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன என்று கூறியுள்ளார் ரெஜினா.