ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பரத் அனே நேனு படத்தின் வெற்றி மகேஷ்பாபுவின் மார்க்கெட்டில் மறுபடியும் ஏற்றத்தை உருவாக்கியிருக்கிறது. வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு அங்குள்ள பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், தனது மனைவிக்கு உதட்டு முத்தம் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டிருந்தார் மகேஷ்பாபு.
இந்த நிலையில், தற்போது உலகப்புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விரைவில் தனது மெழுகு சிலை இடம் பெறப்போவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மகேஷ்பாபு, இதை தனக்கு கிடைத்த கவுரவமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மகேஷ் பாபுவின் உடல் அமைப்பின் மாதிரிகளை அருங்காட்சியகம் குழுவினர் எடுத்து சென்றுள்ளனர்.