பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள், தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர். பின், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் அளித்த பேட்டி:
திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில், முதல்வரை சந்தித்து, மனு அளித்தோம். சிறந்த படங்களை தேர்வு செய்யும் போது, மத்திய அரசு, தயாரிப்பாளருக்கு, சான்றிதழ், கேடயம், பரிசுத் தொகை கொடுப்பது போல், தமிழக அரசும் வழங்க வேண்டும். சென்னையில், படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்துள்ளார் என்றார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர், ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு, பையனுாரில், அரசு, 65 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. அந்த இடத்தை, ஓ.எம்.ஆர்., சாலையுடன் இணைக்க, அரசு உதவ வேண்டும். மருத்துவமனை கட்ட, நகருக்குள் நிலம் ஒதுக்க வேண்டும்.
தயாரிப்பாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தையும் ஒருங்கிணைத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கட்டுப்பாட்டில், தமிழ்நாடு திரைப்பட துறைக்கான வாரியம் அமைக்க வேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.