'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சினிமாத்துறையில் 48 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்டிரைக்குக்குப் பிறகு கடந்த வாரம் முதல் படங்கள் வெளியாகி வருகின்றன. தணிக்கை செய்யப்பட்ட தேதிகளின் வரிசைப்படி, வாரத்துக்கு 4 படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடுகளை வரையறுத்துள்ளது.
அதன்படி இந்த வாரம் பாஸ்கர் ஒரு ராஸ்கல் உட்பட 4 படங்களை வெளியிட அனுமதித்தனர். இந்தப்பட்டியலில் ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படம் இல்லை. ஆனாலும் தியா படத்துக்கு முன்னுரிமை கொடுத்து இந்தவாரம் வெளியிட அனுமதித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு ஏன் முன்னுரிமை?
புதுப்படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்டிரைக் அறிவித்தபோது, காலா படத்தை வெளியிடாமல் லைகா நிறுவனம் சப்போர்ட் பண்ணியது. அதோடு தற்போது கவுன்சில் சார்பாக தொடங்கப்பட உள்ள டிஜிட்டல்சினிமா மாஸ்டரிங் பணியை லைகா நிறுவனம் செய்து கொடுக்க முன் வந்துள்ளது. இதன் காரணமாகவே தியா படத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதாக தெகவல் அடிபடுகிறது.