தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு திரையுலக வேலைநிறுத்தம் முடிந்த பின் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
சென்னையின் கடற்கரைப் பகுதியில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்து வருகிறார். விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வருவதால் அவர் இதுவரை 'செக்கச் சிவந்த வானம்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார். அதனால், படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் காட்சிகளை மணிரத்னம் படமாக்கி வந்தார்.
தமிழ்த் திரையுலகத்தில் முதல் முறையாக பல முக்கிய நடிகர்கள் ஒரே படத்தில் நடிக்கும் படம் இது. மணிரத்னம் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்காக விஜய் சேதுபதியை படமாக்கி வருவது அற்புதமாக உள்ளதாக படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் புகைப்படத்துடன் தகவலைப் பகிர்ந்துள்ளார்.