புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்துள்ள படம் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னயில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, தமிழ் சினிமாவில் நடிர்களின் சம்பளம் மிக அதிகமாக உள்ளது. இதே நிலை நீடித்தால் நான் தமிழ்நாட்டை காலி பண்ணிவிட்டு ஐதராபாத் சென்று தெலுங்கு படங்களை தயாரிக்கத் தொடங்கி விடுவேன் என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளம்தான் என்னைப்போன்ற தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. ஒரு நடிகர் நடிக்கும் படத்திற்கு 100 கோடி வியாபாரம் உள்ளது என்றால், 50 கோடி அவர்கள் சம்பளம் கேட்கிறார்கள். ஆனால் தெலுங்கில் அப்படியல்ல எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் 15 கோடி தான் வாங்குகிறார்கள்.
அந்த அளவுக்கு தெலுங்கு தயாரிப்பாளர், நடிகர்களுக்கிடையே நல்லதொரு புரிதல் உள்ளது. அதனால் தெலுங்கு சினிமாவைப் போன்ற சூழல் தமிழ் சினிமாவிலும் வர வேண்டும். படங்களின் வியாபாரத்திற்கேற்ப நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும்.
இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்த நிலை தமிழ் சினிமாவில் உருவாகவில்லை என்றால், நான் ஐதராபாத்திற்கு சென்று தெலுங்கு படங்கள் தயாரிக்கத் தொடங்கி விடுவேன் என்கிறார் ஞானவேல்ராஜா.