துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் நா பேரு சூர்யா, நாலு இந்தியா. இந்தப் படம் சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் எடுக்க திட்டமிடப்பட்டு இப்போது தெலுங்கு, இந்தியில் மட்டும் நேரடி படமாகவும், தமிழில் டப்பிங் படமாகவும் வெளிவருகிறது. தமிழில், என் பேர் சூர்யா, என் நாடு இந்தியா என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து அதன் தயாரிப்பாளர் ஸ்ரீதர் லகடபாபு கூறியதாவது:
அல்லு அர்ஜூன் தமிழ்நாட்டுக்கு அறிமுகமான ஹீரோ. இதுவரை 18 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அனைத்தும் வெற்றிப் படங்கள். அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக இந்தப் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் எடுக்க முடிவு செய்தோம். காரணம் இது தேசப்பற்றை வலியுறுத்தும் ராணுவம் தொடர்புடைய படம். இந்தப் படத்தின் கருத்து மொத்த இந்தியாவுக்கும் போக வேண்டும் என்று நினைத்தோம்.
மூன்று மொழிகளுக்கும் பொதுவான காட்சிகளை முதலில் எடுத்து விட்டு பின்பு ஹிந்தி, தமிழுக்கு தனியாக காட்சிகள் எடுக்க முடிவு செய்தோம். ஆனால் அதற்குள் சினிமா ஸ்டிரைக் வந்து விட்டதால் எங்களால் தமிழ் காட்சிகளை எடுக்க முடியவில்லை. அதனால் நேரடியாக வந்திருக்க வேண்டிய படம் இப்போது டப்பிங் படமாக வருகிறது. ஆனாலும் டப்பிங் படம் என்று தெரியாத அளவிற்கு நிறைய செலவு செய்திருக்கிறோம்.
தமிழில் நேரடியாக தயாரிக்க முடிவு செய்ததால் தான் சரத்குமார், அர்ஜுன், நதியா, அனு இமானுவேல், சாருஹாசன், சாய்குமார், ஹரீஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்களை நடிக்க வைத்தோம். படத்தை வி.வம்சி இயக்கி இருக்கிறார், ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், விஷால் சேகர் இசை அமைத்திருக்கிறார். தமிழக மக்கள் படத்துக்கு நல்ல ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம். சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது என்றார்.