தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக பெண்கள் மற்றும் சின்னஞ்சிறு பிள்ளைகள் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். காஷ்மீர் சம்பவத்திற்கு பிறகு பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் நாடு முழுக்க ஒலிக்க தொடங்கின.
இந்நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தினார். இந்த சட்டம், உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அதேசமயம், இந்த விஷயத்தில் சிறுமிகள் என்று மட்டும் எடுத்து கொள்ளாமல் எல்லா தரப்பு பெண்களுக்கும் நடக்கும் பாலியல் சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கருத்து பரவ தொடங்கி இருக்கிறது.
இதே கருத்தை நடிகை வரலட்சுமியும் கூறியுள்ளார். அவர் தன் டுவிட்டரில், "டீன் ஏஜ் பெண்ணாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அனைத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும். ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவரை தொடக்கூடாது" என கூறியுள்ளார்.