'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை சுமார் 50 நாட்களாக எந்தப் படமும் வெளியாகவில்லை. ஏப்ரல் 20ம் தேதிதான் 'மெர்க்குரி, முந்தல்' ஆகிய படங்கள் வெளிவந்தன. 50 நாட்களாக நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல புதிய முடிவுகளை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது.
இனிமேல், படங்களின் சென்சார் தேதியைப் பொறுத்தே புதிய படங்களுக்கான வெளியீட்டுத் தேதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தயாரிப்பாளரிடமிருந்தும் அவர்களது படங்களை வெளியிட 3 தேதிகளைக் குறிப்பிட்டுச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். அதற்காக அமைக்கப்பட்ட குழு அந்தப் படங்களைப் பரிசீலித்து ஒன்றுகொன்று அதிகமான மோதல் இல்லாதபடி அனைத்துப் படங்களுக்கும் சரியான வெளியீட்டுத் தேதியை பிரித்துக் கொடுக்க உள்ளார்கள்.
தற்போதைக்கு ஜுன் மாதம் வரையிலான படங்களுக்கான தேதியை வாங்கிவிட்டார்களாம். அது போலவே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி வரையிலான படத்திற்கு வெளியீட்டுத் தேதியை குறித்துக் கொடுக்க உள்ளார்களாம்.
தற்போதைக்கு அடுத்த சில வாரங்களில் வெளியாக உள்ள படங்களாக சில படங்களைத் தேர்வு செய்து வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, “பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், பாடம், தியா, இரவுக்கு ஆயிரம் கண்கள், மோகினி, டிக் டிக் டிக், கீ, கோலி சோடா 2, இரும்புத் திரை, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஒண்ணு போதும் நின்னு பேசும், செம போத ஆகாத, வல்லவனுக்கும் வல்லவன், காளி, கடைக்குட்டி சிங்கம், சர்வர் சுந்தரம், செம, ஆண்டனி, ஒரு குப்பைக் கதை, மிஸ்டர் சந்திரமௌலி, விஸ்வரூபம் 2, காலா,” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.