கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஆஸ்திரேலியாவில் கோல்டுகோஸ்டு நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் சதீஷ்குமார் சிவலிங்கம். தமிழ்நாட்டில் உள்ள வேலூரைச் சேர்ந்தவர். இவருக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். தமிழக அரசு 60 லட்ச ரூபாய் பரிசு அளித்துள்ளது.
சதீஷ்குமார் சிவலிங்கத்தை நேரில் சந்தித்து பாராட்டி அவருக்கு ஒரு பரிசு வழங்கி கவுரவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த சந்திப்பு குறித்து சதீஷ்குமார் கூறியிருப்பதாவது, “ஒரு அற்புதமான மனிதரைச் சந்தித்தேன். காமென்வெல்த் தங்கப்பதக்கத்துடன் அவரைச் சந்தித்ததை உண்மையில் நேசித்தேன். அவருடைய அன்பான வார்த்தைகள் எனக்கு உண்மையில் மிகவும் ஊக்கமளித்தன. நான் மிகவும் ஆச்சரியப்படும் நட்சத்திரம் அவர். அவருடைய வாழ்க்கைப் பாதையில், கடின உழைப்பால் கொண்டாடப்பட வேண்டியவர். உங்கள் அன்பான பரிசுக்கு மிக்க நன்றி சகோதரா,” என சதீஷ்குமார் சிவலிங்கம், சிவகார்த்திகேயனைப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.