அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மாத்தியோசி, கோட்டி, குகன், குரள் 146 படங்களுக்கு இசை அமைத்தவர் குரு கல்யாண். இவர் அவ்வப்போது தனி பாடல்களை உருவாக்கி இணையதளத்தில் பதிவேற்றுவார். அவர் பதவிவேற்றிய வீரத் தமிழன், இளைய தளபதி ரசிகண்டா, தமிழச்சியே, ஜீரோ தான் ஹீரோ உள்ளிட்ட பாடல்கள் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது மீம்ஸ் பற்றிய பாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
நாட்டு நடப்புகளை கிண்டல் செய்து வெளியாகும் மீம்ஸ்கள் தான் இப்போது டிரண்டிங். அரசியல்வாதி முதல் கம்பெனிகள் வரை மீம்ஸ்களை கண்டு அலறுகிறார்கள். அதைப்பற்றிய பாடல் ஒன்றை இப்போது வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து குரு கல்யாண் கூறியதாவது:
மீம்ஸ்" தனிமனிதர் மற்றும் இந்த தலைமுறை மீதும் மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது, வெகு விரைவாகவும் சென்றடைகிறது. இது ஒரு மாடர்ன் மிமிக்ரி என்றே எண்ணுகிறேன். ஐ.டி மீம்ஸ், பி.பி.ஓ மீம்ஸ், கணவன் & மனைவி மீம்ஸ், என்று இதில் பல வகையான மீம்ஸ்கள் பயன்பாட்டில் இருப்பதை கண்டு வியப்படைந்தேன். ஜாதி மதங்களை தாண்டி இது அனைவரையும் சென்றடைந்து மகிழ்ச்சியடைய வைப்பது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது. போலியான மீம்ஸ் செய்திகள் வந்தால் அதனையும் மீம்ஸ்-ஆக எழுதி அதையும் ட்ரெண்ட் செய்துவிடுகிறார்கள்.
மீம்ஸ் மிகவும் அருமையான வளர்ச்சி, அதனை நம் சமுதாயம் மேலும் அழகுற பயன்படுத்திக்கொண்டால் நமது ஒற்றுமை மேம்படும், தமிழர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று கருதி, எனது இந்த மீம்ஸ் பாடலை நான் எழுதி, இசையமைத்து, பாடி வெளியிட்டுள்ளேன் என்றார் குரு கல்யாண்.