ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஜாதி வெறியால் ஆணவக்கொலை செய்யப்பட்டார் உடுமலைப்பேட்டை சங்கர். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர் ஆதிக்க சாதியை சேர்ந்த கவுசல்யாவை காதலித்ததற்காக நடு ரோட்டில் படுகொலை ஆனார். இந்த கொலை சம்பவத்தில் தப்பிய கவுசல்யா தற்போது ஆணவக் கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
சங்கரின் கொலை சம்பவம் மாறாத சமூகம் என்ற பெயரில் சினிமாவாக தயாராகி வருகிறது. இதில் காதர் என்ற புதுமுகம் சங்கராகவும், திலிஜா என்ற புதுமுகம் கவுசல்யாவாகவும் நடித்து வருகிறார்கள். இவர்கள் தவிர நமோ நாராயணா, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அஆஇஈ திரைப் பட்டறையின் சார்பில் என்.மணிகண்டன் தயாரிக்கிறார், பங்கஜ் எஸ்.பாலாஜி இயக்குகிறார். தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், டேனியல் ஜோசப் மற்றும் சம்பத் இசை அமைக்கிறார்கள். படப்பிடிப்பு நடந்து வருகிறது.